*ஒரு பக்கம் கடல் மறுபக்கம் நதி; மக்களை ஈர்க்கும் மறவந்தே கடற்கரை.*
ஒரு பக்கம் நதியையும், மறுபக்கம் அரபிக்கடலையும் கொண்ட மறவந்தே கடற்கரை, இயற்கையை ரசிப்போருக்கு ஏற்ற இடம்.
உடுப்பி மாவட்டம், பைந்துாரில் ஒரு புறம் அரபிக்கடலையும், ஒரு புறம் சவுபர்ணிகா நதியையும் கொண்டது மறவந்தே கடற்கரை.
நெடுஞ்சாலையில் இருபுறம் கடலும், நதியை கொண்ட இந்த பகுதியை, கர்நாடகா மட்டுமின்றி, இந்தியாவில் இதுபோன்று வேறு எங்கும் பார்க்க முடியாது.
மறவந்தேயில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய கடற்கரையுடன் கூடிய பைந்துார், பாறைகள் நிறைந்த ஒட்டினனே, பெலகா தீர்த்த நீர்வீழ்ச்சி ஆகியவை மறவந்தே கடற்கரையை சுற்றிலும் உள்ள சில முக்கிய சுற்றுலா அம்சங்கள் ஆகும்.
*எப்படி செல்வது?*
பெங்களூரில் இருந்து 420 கி.மீ., தொலைவிலும்;
மங்களூரில் இருந்து 105 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
கார்வார் விரைவு ரயில் மூலம், குந்தாபுரா ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் மறவந்தே அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு செல்லலாம்.
சாலை வழியாக குந்தாபுரா நகரில் இருந்து மறவந்தே கடற்கரைக்கு டாக்சிகள் கிடைக்கின்றன.
குந்தாபுராவில் இருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ளது.
மறவந்தே கடற்கரைக்கு மிக அருகில் கடற்கரை ஓய்வு விடுதிகள் அல்லது ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. குந்தாபுரா நகரிலும் தங்கலாம்.
No comments:
Post a Comment